(இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது )
8:30AM, April 11,2030 .
டார்க் லாண்ட் போகவேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு. எங்கள் என்பதன் அர்த்தம் நானும் என் மகளும் மட்டுமே . என் மனைவி இந்த மாதிரியான பயணம் மேற்கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள் அல்ல என்பதால் அவள் இதில் சேர்த்தி இல்லை. இப்பவும் கூட நாங்கள் நியுசிலாந்து போறோம் என்று தான் அவளிடம் சொல்லி இருக்கிறோம். இல்லையென்றால் பயத்திலேயே பாதி உசிரை விட்டு விடுவாள்.
எங்கள் பயணத்திட்டமே ஒரு சுவாரஸ்யமான கதை. மீனு குட்டிக்கு பன்னிரண்டு வயது இருக்கும் போது Gmap இல் பயணம் செய்துகொண்டிருந்த போது சேது சமுத்திரத்தின் Adam பாலத்தை கண்டு என்னிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அவள் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலை மட்டும் சொல்லாமல் அதனுடன் தொடர்புடைய எல்லா விசயங்களையும் சொல்ல ஆரம்பித்து விடுவேன். அன்றும் அப்படித்தான் ராமாயணத்தில் ஆரம்பித்து ஈழ விடுதலை வரை சொல்லிகொண்டிருந்தேன்.
கொஞ்சம் பொறுங்கள் . Air Taxi வரும் சத்தம் கேட்கிறது. எங்கள் வீட்டிற்கு Air Taxi வரும் அளவுக்கு இடம் கிடையாது என்பதால் பக்கத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் இறங்கும் என்று காலையிலேயே VMS ( Video Message Service ) வந்துவிட்டது. Air Taxi இப்போது தான் இந்தியாவுக்கு அறிமுகமாகி இருக்கிறது என்பதால் யாழ் Airways முதல் வகுப்பு டிக்கெட் வாங்கும்போது இலவச இணைப்பாக இந்த சேவையை கொடுத்திருக்கிறார்கள். Air Taxi இல் ஏறினால் பத்துநிமிடத்தில் விமான நிலையம் சென்று விடலாம் . அங்கிருந்து யாழி என்கிற ஈழ நாட்டின் விமானத்தை பிடித்து விடலாம். அங்கிருந்து 30 நிமிட பயணத்தில் யாழ் பாண விமான நிலையத்தை அடைந்து விடலாம். மீண்டும் 10 நிமிட Air Taxi பயணம். டார்க் லாண்ட் என்று சொல்லப்படும் முள்ளிவாய்கால் வந்து விடும். எங்கள் பயணம் ஆரம்பித்து விட்டது.
அவ்வாறு அன்று ஈழ விடுதலை வரை சொல்லிகொண்டிருக்கும் போது முள்ளி வாய் கால் மாபெரும் மனித படுகொலையையும் அவள் மனம் துயருராத வகையில் மறைத்தும் மறைகமலும் சொல்லிவந்தேன். அன்று ஆரம்பித்தாள் கச்சேரியை டார்க் லாண்ட் போகவேண்டும் என்று. கடந்த ஒன்பது வருடங்களாக இந்த அந்தா என்று இழுத்து கொண்டிருந்தாலும் விடாமல் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். ” The dark land” என்று சமிபத்தில் வெளிவந்த British திரைப்படம் 11 Oscar Awards வென்று உலகெங்கும் சக்கை போடு போடுகிறது.
எனக்கும் உள்ளுர ஆசை இருந்தாலும் , அந்த இடத்தை நேரில் பார்க்கும் மன தைரியம் இல்லாததால் ஆண்டுகளை கடத்தி வந்தேன். அதற்குள் ஆண்டுகள் பலவாகி ” நீங்கள் கூட்டிசெல்கிறீர்களா இல்லை நானே செல்லட்டுமா” என்ற அளவுக்கு வரவும் வேறுவழியின்றி கூட்டி செல்ல முடிவெடுத்தேன்.
இப்போது கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் பறக்கிறோம் என்ற அறிவிப்பு வந்தது. கூடவே எங்கள் இருக்கையின் முன் உள்ள பிளாஸ்மா டிஸ்ப்ளே இல் சேது சமுத்திரத்தின் கடலையும் அதில் தெரியும் ராமர் பாலமும் தெரிகின்றது. மீனு குட்டி டிஸ்ப்ளே இல் ஜூம் பண்ணி பார்த்தாள். மிதக்கும் பாறைகளை பற்றிய இணைய தொடர்பை தட்டினாள். அறிவியல் விளக்கங்களும் ஆன்மிக விளக்கங்களும் அடுத்தடுத்து வந்தன. அதை முழுதாக வாசித்துகொண்டிருக்கும் போதே ” யாழ் விமான நிலையத்தை நெருங்கி விட்டோம். உங்கள் இருக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அறிவிக்கவும். நாங்கள் இருக்கையில் சாய்ந்து உட்கார அதுவே எங்கள் கைகளையும் கால்களையும் எலாஸ்டிக் வளையங்களால் பிணைத்தது. தரை இறங்கியதும் தானாக விடுவித்தும் விட்டது. இதில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. மீனு குட்டி எரிச்சல் பட்டுகொண்டாள்.
“எவன் இதை கண்டுபிடிச்சான் அவனை இந்த சீட்டில் உட்கார வச்சு கடல்ல தள்ளனும்” என்றாள். அவளுக்கு இதுமாதிரி எல்லாம் பாதுகாப்புக்கு கூட பிணைக்கப்பட்டு இருந்ததில்லை. காரில் கூட சீட் பெல்ட்டை அறுத்து எறிந்தவள். பிடிவாதம் அவள் உடன் பிறப்பாக இருந்தது.
யாழ் விமான நிலையத்தில் எந்தவித சோதனையும் இல்லாமல் வெளிவந்து Air Taxi ஐ பிடித்தோம். இதை நான் ஆச்சர்யமாக மீனுவிடம் சொன்ன போது அவள் சிரித்தாள். “டாடி இதுவரை உங்களை 18 தடவை சோதித்து விட்டார்கள் உங்களுக்கே தெரியாமல். பின்ன எதுக்கு இவ்ளோ பெரிய Fiber Passing Tube இல் வந்தோம் அழகுக்கு என்றா நினைத்தீர்கள்.?” என்றாள் . சிரித்துக்கொண்டேன்
Air Taxi நாங்கள் நினைத்ததை விட வேகமாக பறந்தது. ” தியாக பூமி உங்களை அன்புடன் வரவேற்கிறது ” என்ற அறிவிப்பு பலூன் எங்களை கடந்து சென்றது. இறங்கினோம். மணியை பார்த்தேன் 10:30AM, April 11,2030 . இன்று மாலையே திரும்ப இருப்பதால் எந்த சுமையும் எடுத்துவரவில்லை. 64X Digicam மட்டுமே மீனுவின் கையில் இருந்தது. அது கூட கொண்டுவர எனக்கு பிடிக்கவில்லை. மீனுவின் விருப்பமே அது. மீனு Digicam ஐ ஆன் செய்த போது சொன்னேன் ” மீனு , இது தியாக பூமி . உணர்வு பூர்வமாக பார்க்க வேண்டிய இடம் . காமரா கண்ணில் பார்த்தால் உணர்வு மறந்து போகும். அதை தான் விரும்புகிறாயா ” என்றேன்.
ஒரு வினாடி யோசித்தவளாய் “Sorry daddy ” என்று சொல்லி கேமராவை தன் பாக்கெட்டில் வைத்துகொண்டாள். அது தான் அந்த இடத்தில் அவள் பேசியது. அதன் பிறகு பேசவே இல்லை. நான் பேச வந்த போது கூட பேச வேண்டாம் என்று சைகையில் சொல்லி தடுத்து விட்டாள். அருங்காட்சியகம் , புகைபட காட்சியகம், அருங்காட்சியக திரை அரங்கம் என்று எங்கு சென்ற போதும் அவள் வாயே திறக்க வில்லை. ஆங்கங்கே காணப்படும் செப்பு சிலைகள் பார்வையாளர்களை மனத்துயரில் ஆழ்த்தும் அழகுடன் இருந்தன. ஒரு சிலையின் முன் அவள் வெகு நேரம் நின்றாள். குண்டடிபட்டு இறந்த தாயின் மார்பில் ஒரு குழந்தை பால் அருந்துவது போல அமைக்கப்பட்ட சிலை, இல்லையில்லை துயரம்.
அங்கிருந்த சிற்றுண்டி இல் உணவருந்தும் போது , அவளிடம் கேட்டேன் ஏன் அந்த சிலை முன் அவ்வளவு நேரம் நின்றாய் ” என்று .
” அப்பா.. ( பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அவள் என்னை அப்பா என்று அழைக்கிறாள் . இல்லை என்றால் எப்பவும் டாடி தான் ). என்னை எதுவும் கேட்காதீர்கள் அப்புறம் என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது போய் விடும் ” என்றாள். அதன் பிறகு நான் எதுவும் கேட்கவில்லை.
அதன் பிறகு நாங்கள் சென்ற இடம் எங்கள் இதயத்தை ஒரு கணம் நிறுத்துவதாக இருந்தது. 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த 22,000 சமாதிகள். ஒவ்வொரு சமாதிக்கும் ஒரு கதை இருந்திருக்கும். ஆனால் எல்லோர் கதைகளின் முடிவு மட்டும் ஒன்றாக இருந்தது தான் பெரும் துயரம்.
பிறகு இன்னும் சில இடங்களுக்கு போக வேண்டி இருந்தது. துப்பாக்கி குண்டுகளால் சல்லடை ஆக்கப்பட்ட மருத்துவமனை, ரத்தத்தில் தோய்ந்த்த பதுங்கு குழிகள் என்று சில நினைவிடங்களுக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் மனதின் சுமையை கூட்டிக்கொண்டே தான் போக வழி இருகிறதே ஒழிய , அங்கே குறைக்க வழி இல்லை. அதனால் திரும்புவது என்று முடிவெடுத்து அவளிடம் கேட்டேன். சரி என்று மெளனமாக தலை அசைத்தாள்.
திரும்பும் வழி எங்கும் அவள் ஒரு வார்த்தை பேச வில்லை. ஏன் என் முகத்தை கூட பார்க்க வில்லை. யாழ் விமானம் மண்ணை விட்டு விண்ணுக்கு கிளம்பியது. சீட் பெல்டின் இறுக்கம் தளர்ந்தது என்றாலும் மனதின் இறுக்கம் அப்படியே தான் இருந்தது. ஒரு கணம் மீனு குட்டி என்னை பார்த்தாள். ஏதோ கேட்க வருகிறாள்.
“இங்கே போர் நடந்தபோது உங்களுக்கு என்ன வயசு ? “
“முப்பது வயது இருக்கும் . நீ அப்போ எட்டு மாத குழந்தை ” என்று பழைய புராணத்தை எடுத்து விட எத்தனித்த போது
“போதும் உங்கள் கதை. இங்கே போர் நடக்கும் போது, இதுமாதிரி ஒரு ஒரு.. சொல்ல முடியாத அளவு பெரும் கொடூரம் நடக்கும் போது நீங்கள் தமிழ்நாட்டில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் “
“என்னால் என்ன முடியும். blog இல் என் மனத்துயரை கொட்டி ஒரு பதிவு போட்டேன். “
“உங்களை நினைத்தால் எனக்கு ரெம்ப வெட்கமா இருக்கு டாடி” என்று சொல்லிவிட்டு ஜன்னலின் வழியே ஈழத்தை மறையும் வரைக்கும் பார்க்க தொடங்கினாள்
அன்று காத்த அதே மௌனத்தை இன்றும் காக்கிறேன் ஒரு மரம் போல .