பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.
பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்வேன் கச்சியேகம்பனே !
முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .
இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது இறக்கும் கடைசி காலம் வரை கொடுக்க மறுக்கும் இவர்களுக்கு என்ன சொல்வேன் கச்சி ஏகம்பனே
இதை விட அருமையான சித்தர் பாடல் ஒன்று உண்டு . அதை நாளை சொல்கிறேன்
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கதைகள் | குறிச்சொற்கள்: அரசியல்வாதி, பட்டினத்தார்

பெரியாண்டவர் ஆலயம் திருநிலை ஈசனை பற்றி எழுதுங்கள்
உங்கள் மறுமொழி என்னை ஆச்சர்ய பட வைத்தது. ஒருவேளை இறைவன் என்னை கருவியாக்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத்தான் இந்த நாடகமோ என்று நினைகிறேன்.